Thursday, February 03, 2005

யாரும் யாருக்கும்

அண்மையில் இணையத்தளம் ஒன்றில் சாதனைப் பெண்கள் என்ற ஒரு பதிவினை வாசிக்க நேரிட்டது. அந்தப் பதிவினிலே டயானாவின் பெயரும் இருந்தது. டயானா செய்த சாதனை என்னவென்று அறிவோம் என்ற எண்ணத்தில் அந்த பகுதியினை வாசிக்கலானேன். அந்தப் பத்தியின் படி டயானா செய்த சாதனை ஓர் எயிட்ஸ் நோயாளியுடனும் தொழு நோயாளியுடனும் கை குலுக்கினார் என்பதே. எனக்கு இன்னொன்றும் தெரியும். அவர் மிதிவெடிகள் அகற்றுதல் சம்பந்தமான சேவை ஒன்றிலும் ஈடுபட்டு இருந்தார்.


சாதனைப் பெண் டயானா குறித்த பத்தியில் மேற்சொன்ன கை குலுக்கல் சமாச்சாரத்தை விட மீதி என்ன தெரியுமா? அவர் எவ்வளவு அழகானவர்! முதல் பத்திரிகையாளர் சந்திப்பு! அதாவது இவர்தான் இனி இளவரசி என்று அறிந்தவுடன் அவர் பணி புரியும் பாடசாலைக்குச் சென்று அவரை படம் பிடித்தமை! அது எப்படி அங்கு கூறப்பட்டது தெரியுமா? இதோ இப்படி


ஒரு சிறிய குழந்தையைக் கையில் து}க்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா "மிஸ்'' தயக்கத்துடன் வெளியே வந்தாள். தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கேர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர... ( இப்படி! ) அதைவிட அவர் குடும்பம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள்

இதனை ஆட்சேபித்து என் கருத்தினைச் சொன்னேன் என்னை "ஆணாதிக்கக்காரன்'' என்று விட்டார்கள். அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கு இல்லை.


டயானா சாதனைப் பட்டியலில் இடம்பெற்றதன் காரணம் என்ன? அவர் பிரபல்யமான பெண்ணாக (அதாவது நானறிந்த அளவில் உலகில் அதிகளவு புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்) இருந்தமையாக இருக்கலாம் அதாவது பிரித்தானிய ராணியின் மன்னிக்கவும் மகாராணியின் மருமகள், அழகானவர். இரண்டாவது தகைமையே டயானா பிரபல்யமானதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அதைவிட டயானா ஒன்றும் பெரிதாய் செய்து விடவில்லை. அனைத்தும் ஊடங்களே! அதுவும் இங்கிலாந்து ஊடகங்கள்! யப்பா...!


எல்லாம் ஒரு வகை பிரமிப்பு! டயானா! மகாராணி!. ஒரு உதாரணம் சொல்கிறேனே, பக்கிங்காம் மாளிகை!


லண்டனுக்கு வருகிற என் நண்பர் முதற்கொண்டு உறவினர்வரை பார்க்க விரும்புகிற ஒரு இடம். அங்கே என்ன நிகழ்கிறது, ஒரு பெரிய மாளிகை சுற்றி இரும்புத் து}ண்களுடனான ஒரு இரும்பு வேலி! ஏதோ ஒரு நேரத்தில் காவலாளிகள் மாறுவார்கள் (வேலை முடிந்தவுடன் இன்னொருவர் பொறுப்பேற்பார்). இதுதான் அங்கு முக்கியமான கட்டம்! புதிதாக சிலர் வருவார்கள். ஏதேதோ சொல்லுவார்கள். நின்றவர்கள் போய்விடுவார்கள். இதை பார்க்கத்தான் அங்கே போகிறோம். (என்னைப் பார்க்க யாராவது லண்டன் வந்தால் என் பாடு அதோ கதிதான். பக்கிங்காம் மாளிகை...)


எங்களுரிலும் காவலாளிகள் இருக்கிறார்கள். வேலை முடிய மற்றவர்கள் மாறி வருவார்கள். இதனை நாங்கள் யாரும் அங்கு போய் வாய் பிளந்து பார்ப்பதில்லையே! ஏன்? சரி போய்ப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் என்ன நடக்கும்? "போய் வேலையப் பாரன்... இங்க என்ன படமா காட்டிறம்...'' இப்படி ஒரு அர்ச்சனை கிடைக்கும். இதுவும் குறைந்த பட்ச அர்ச்சனையே.

அப்படி இருக்க இங்கே ஏன் இதனை அனுமதித்து இருக்கிறார்கள்? அதுவும் இது ஒன்றும் சுற்றுலா பிரதேசம்போல உள்ளே செல்ல முடியாது. அதிக பட்சம் இரும்பு வேலிகளுக்கிடையில் முகத்தினை வைத்துக் கொண்டு குரங்கு போல பராக்குப் பார்க்கலாம். அவ்வளவுதான்.


சரி இதற்குப் பின்னும் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று சொல்லாவிட்டால், அது அவ்வளவு நன்றாக இருக்காது. சில விடயங்களில் சில மனிதர்கள் தங்களின் சுய அனுகூலங்களுக்காக சிலவற்றைக் கடைப்பிடிப்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் பக்கிங்காம் மாளிகை. (மக்கள் ஏதோ மனுக்கொடுக்க வந்தவர்கள்போல வெறுமனே காய்ந்து கொண்டு இருந்துவிட்டு வீடு செல்லுகிறார்கள்.)

ஒரு மனிதரை மதிப்பது வேறு! அவருக்கு மேலதிகமாக மரியாதை கொடுப்பது வேறு! இரண்டாவதை ஏற்க முடியாதது என்றே சொல்வேன். காதல்கவிதை திரைப்படத்தில் டயானாவை 'காதலான தாயே' என்று ஒரு பாடலில் வர்ணித்து இருப்பார்கள். இந்த விடயத்தில் டயானாவில் ஏதும் தவறில்லை. வியாபார நோக்கில் அன்றைய சு10ளலில் சினிமாக்காரர்கள் செய்த யுக்தி இது! ஏனென்றால் போட்ட பணத்தினை திருப்பி எடுக்கவேண்டும். பார்வையாளர்களினைக் குறித்து அக்கறை எல்லாம் அவர்களுக்கு இல்லை. ஆனால் பார்த்தவருர்களுக்கு டயானா தேவதை! எங்கோ இருந்த பெண்மணிக்கு மனதில் 'இளவரசி' சிங்காசம் கொடுத்து அமர்த்தி விட்டார்கள்.


எனக்கென்னவோ யாராகிலும் சினிமா நடிகர்களை தல,கில என்று சொல்லக் கேட்டால் மிகவும் வேதனையாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் இன்னொருவரின் பங்கு என்ன? ஏன் இப்படி ஒரு மாயை, பிரம்மை?

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. யாரும் யாரையும் விடக் கூடியவர்கள் அல்ல! ஒருவர் மீது ஒருவர் பிரமிப்பு வைப்பது து}க்கித் தலையில் வைத்திருப்பது போன்றவை சென்ற நு}ற்றாண்டுக்கு வேண்டு மென்றால் பொருந்தலாம் ஆனால் இந்த நு}ற்றாண்டுக்கு.... வேண்டாம் து}க்கி எறியுங்கள்!

3 comments:

ஜோ/Joe said...

You said what I felt!

வானம்பாடி said...

சிறப்பாகச் சொன்னீர்கள். டயானா அழகான இளவரசியாக இருந்ததைத் தவிர வேறு என்னதான் சாதனை புரிந்தார் என நானும் பல முறை யோசித்ததுண்டு. சரி, நம் பொது அறிவுக்கு அந்த விஷயம் தெரியவில்லை என வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டேன். 2004ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற வாங்காரி மாத்தாயை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்...

aathirai said...

nalla pathivu. pennaathikkam peruththuvittadhu. :)