Thursday, February 17, 2005

சுனாமி முடிந்துவிட்டது

சுனாமி முடிந்துவிட்டது சனம் ஆறப்போகுது மச்சான் ஏதாவது செய்யவேணும் இல்லாட்டி சனம் எல்லாத்தையும் மறந்திட்டு பேசாம இருந்திடும்' என்று என் நண்பன் சொன்னான். உண்மைதான்! எங்களில் பலருக்கு அது மறந்து போய்விட்டது. ஆனால் அன்றைய நாட்களில் நாங்கள் எப்படி ஒடித் திரிந்து உதவினோம் ஆனால் இப்போது!!. எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டது.இந்தச் சுனாமி மட்டுமல்ல பல விடயங்களில் நாங்கள் இப்படித்தான். உடைக்கப்படுகின்ற சோடா போல (குளிர்பானங்கள்). புஸ்... என்று ஒரு சத்தத்துடன் சிலவேளைகளில் வெளியிலும் சிந்தி, பின் அடங்கி விடுவது. ஆக இது இயல்பான ஒன்றே!அப்போ இனிமேல் எங்களில் பலருக்கு சுனாமி குறித்தோ அவை தந்த விளைவுகள் குறித்தோ அக்கறை வராது. எல்லாம் கரைந்து விட்டது. உண்மைதான்! ஆனால் எப்படி இதனை விட்டுவிட்டு இருப்பது? முடியாதே! இப்படி நான் எனக்குள் யோசித்தபடி இருக்கிறேன். . . . .


பாடசாலைக் காலங்களில் நாங்கள் ஏதாவது பரீட்சையில் சித்தியடையவேண்டும் என்றால் இராப்பகல் கண் விழித்துப் படிக்கின்றோம். பலவேளைகளில் பரிட்சையில் வெற்றியும் அடைகின்றோம். பின்னர் வேலை செய்கின்றபோது உயர்பதவியினை அடைவதற்காக பலவழிகளில் சிரமப்பட்டு வேலைசெய்து சிலவேளைகளில் வெற்றியும் அடைகின்றோம். இந்த முயற்சிகளிற்காக செலவிடப்படும் காலம் அனேகமாக சில மாதங்களாக இருக்கும். ஒருவாரத்தில் பரிட்சைக்காக அல்லது வேலை உயர்வுக்காக எங்களைத் தயார் செய்து கொள்வது கடினமே. (பரிட்சை என்றால் வெறும் அரை இறுதிப் பரீட்சை என்று எண்ணமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்)


இதைவிட, காதல் என்று ஒரு விடயம் இருக்கிறதே ஐயகோ!
அது காலத்தினைப் பற்றியெல்லாம் கவலைப்பட வைக்காது. காதலியையோ காதலனையோ அடையும் வரை உள்ளே நெருப்பினை எரித்தபடி இருக்கும். இப்படியே இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சுனாமிக்கு வருவோம்.


ஏன் சுனாமி எங்களுக்கு இப்படியான தாக்கத்தினை ஏற்படுத்தாமல் சில வாரங்களுள் ஓடி ஒளிந்து கொண்டது?. கல்வித்தேர்ச்சி, பதவி உயர்வு, காதல், போன்றவற்றை விட சுனாமி தாழ்ந்ததா? இங்கேதான் ஒரு விடயம் கவனிக்கப்பட்டாக வேண்டும். கல்வியா வேலையா காதலா சுனாமியா என்பதெல்லாம், நாங்கள்தான் தீர்மானிக்கிறோம். நாங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தில் தான் எல்லாம் இருக்கிறது. காதலை எடுத்துக் கொண்டால் 'ஓர்மோன்களும்' சேர்ந்து எங்கள் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியினை வழங்குகிறது.


ஆகவே ஒரு விடயத்தில் உள்ள ஆர்வம் அல்லது அவசியத்தன்மை அனேகமாக அந்த விடயத்தில் வெற்றி அடையச் செய்கிறது. இப்படியாயின் புலம்பெயர் ஈழத்தழிழர்கள் (நேரடியாகப் பாதிக்கப்பட்டோரை விட) சுனாமி நிவாரணச் செயற்பாடுகளுக்கு உதவுவது ஆர்வத்திலா அல்லது அதில் உள்ள அவசியத்தன்மையிலா? பெரிதாக இரண்டும் இல்லை என்றுதான் எண்ணுகிறேன்! 'என்னடா சொன்னாய்' என்று எத்தனைபேர் வெகுண்டெழுகிறீர்கள்? ஒருவரும் இல்லை! ஆனால் 'அப்படிச் சொல்லமுடியாது' என்று பலரும் சொல்லுவீர்கள். சுனாமி எங்கள் மனங்களில் 'அன்று' பெரிதாக இடம் பிடித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 'சர்வதேச ஊடகங்கள்' என்பது என் கருத்து!


ஏனெனில் சுனாமி நாட்டில் பலவித அழிவுகளினைத் தந்திருந்தாலும் கூட இருபது வருடமாக உரிமைப் போராட்டம் நடந்து வரும் எம் நாட்டில் எப்போதாவது இப்படி ஒன்றாய் சேர்ந்து நின்றோமா?. இல்லையே, இப்போது தானே எங்கள் பலம் எங்களுக்கே தெரிந்து இருக்கிறது. அதனால் தான் சர்வதேச ஊடகங்களும் முக்கிய காரணம் என்கிறேன். ஊடகங்களை விட்டுவிட்டு மறுபடி விடயத்திற்கு வருவோம்.


சில விடயங்களைப் பொறுத்த வரையில் எங்களுக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருக்கிறது. சிலவற்றைப் பொறுத்தவரையில் தேவை இருக்கிறது. இதனால் தான் நாங்கள் அந்த சில விடயங்களில் மும்முரமாக இயங்குகிறோம்.


ஆகவே, நான் சொல்ல வருவது என்னவெனில் இயல்பான ஆர்வத்தினை தவிர்த்து தேவை கருதி சில விடயங்களில் இறங்குவது என்பது நாமே ஏற்படுத்திக் கொள்வது. இதுபோல் சில தீர்மானங்களினை நாம் ஏற்கனவே எங்களுக்குள் அமுல்ப்படுத்தலாம். உதாரணத்திற்கு எங்கள் தேசம் என்று எடுத்துக்கொண்டால்! என் தேசத்தில் பற்று எனக்குள் ஹஎன்றும்' இருக்க வேண்டும். எம் தேசத்தினைக் கட்டியெழுப்பும் பணியில் என் பங்கு என்ன? எப்படியாய் நான் இதைச் செய்யப்போகிறேன் என்றெல்லாம் அக்கறை உடையவனாய் இருக்கவேண்டும் என்று ஒரு தீர்மானத்தினை ஏற்கனவே நான் எடுத்து இருக்கவேண்டும்.


அதாவது சில விடயங்களை நாங்கள், எங்கள், சமூகநலன் கருதி எங்களுக்குள்ளே இப்படி எல்லாம் ஏற்கனவே எழுதி வைத்து விட்டு இருக்கவேண்டும். அப்படி என்றால்தான் ஆர்வமற்ற ஆனால் அவசியமான எங்கள் செயற்பாடுகளுக்கு எப்போதும் உந்துதலினை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் எங்கள் கருமங்களில் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்பது, இந்த அடியவனின் மிகமிகத் தாழ்மையான கருத்து.

Thursday, February 03, 2005

யாரும் யாருக்கும்

அண்மையில் இணையத்தளம் ஒன்றில் சாதனைப் பெண்கள் என்ற ஒரு பதிவினை வாசிக்க நேரிட்டது. அந்தப் பதிவினிலே டயானாவின் பெயரும் இருந்தது. டயானா செய்த சாதனை என்னவென்று அறிவோம் என்ற எண்ணத்தில் அந்த பகுதியினை வாசிக்கலானேன். அந்தப் பத்தியின் படி டயானா செய்த சாதனை ஓர் எயிட்ஸ் நோயாளியுடனும் தொழு நோயாளியுடனும் கை குலுக்கினார் என்பதே. எனக்கு இன்னொன்றும் தெரியும். அவர் மிதிவெடிகள் அகற்றுதல் சம்பந்தமான சேவை ஒன்றிலும் ஈடுபட்டு இருந்தார்.


சாதனைப் பெண் டயானா குறித்த பத்தியில் மேற்சொன்ன கை குலுக்கல் சமாச்சாரத்தை விட மீதி என்ன தெரியுமா? அவர் எவ்வளவு அழகானவர்! முதல் பத்திரிகையாளர் சந்திப்பு! அதாவது இவர்தான் இனி இளவரசி என்று அறிந்தவுடன் அவர் பணி புரியும் பாடசாலைக்குச் சென்று அவரை படம் பிடித்தமை! அது எப்படி அங்கு கூறப்பட்டது தெரியுமா? இதோ இப்படி


ஒரு சிறிய குழந்தையைக் கையில் து}க்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா "மிஸ்'' தயக்கத்துடன் வெளியே வந்தாள். தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கேர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர... ( இப்படி! ) அதைவிட அவர் குடும்பம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள்

இதனை ஆட்சேபித்து என் கருத்தினைச் சொன்னேன் என்னை "ஆணாதிக்கக்காரன்'' என்று விட்டார்கள். அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கு இல்லை.


டயானா சாதனைப் பட்டியலில் இடம்பெற்றதன் காரணம் என்ன? அவர் பிரபல்யமான பெண்ணாக (அதாவது நானறிந்த அளவில் உலகில் அதிகளவு புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்) இருந்தமையாக இருக்கலாம் அதாவது பிரித்தானிய ராணியின் மன்னிக்கவும் மகாராணியின் மருமகள், அழகானவர். இரண்டாவது தகைமையே டயானா பிரபல்யமானதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அதைவிட டயானா ஒன்றும் பெரிதாய் செய்து விடவில்லை. அனைத்தும் ஊடங்களே! அதுவும் இங்கிலாந்து ஊடகங்கள்! யப்பா...!


எல்லாம் ஒரு வகை பிரமிப்பு! டயானா! மகாராணி!. ஒரு உதாரணம் சொல்கிறேனே, பக்கிங்காம் மாளிகை!


லண்டனுக்கு வருகிற என் நண்பர் முதற்கொண்டு உறவினர்வரை பார்க்க விரும்புகிற ஒரு இடம். அங்கே என்ன நிகழ்கிறது, ஒரு பெரிய மாளிகை சுற்றி இரும்புத் து}ண்களுடனான ஒரு இரும்பு வேலி! ஏதோ ஒரு நேரத்தில் காவலாளிகள் மாறுவார்கள் (வேலை முடிந்தவுடன் இன்னொருவர் பொறுப்பேற்பார்). இதுதான் அங்கு முக்கியமான கட்டம்! புதிதாக சிலர் வருவார்கள். ஏதேதோ சொல்லுவார்கள். நின்றவர்கள் போய்விடுவார்கள். இதை பார்க்கத்தான் அங்கே போகிறோம். (என்னைப் பார்க்க யாராவது லண்டன் வந்தால் என் பாடு அதோ கதிதான். பக்கிங்காம் மாளிகை...)


எங்களுரிலும் காவலாளிகள் இருக்கிறார்கள். வேலை முடிய மற்றவர்கள் மாறி வருவார்கள். இதனை நாங்கள் யாரும் அங்கு போய் வாய் பிளந்து பார்ப்பதில்லையே! ஏன்? சரி போய்ப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் என்ன நடக்கும்? "போய் வேலையப் பாரன்... இங்க என்ன படமா காட்டிறம்...'' இப்படி ஒரு அர்ச்சனை கிடைக்கும். இதுவும் குறைந்த பட்ச அர்ச்சனையே.

அப்படி இருக்க இங்கே ஏன் இதனை அனுமதித்து இருக்கிறார்கள்? அதுவும் இது ஒன்றும் சுற்றுலா பிரதேசம்போல உள்ளே செல்ல முடியாது. அதிக பட்சம் இரும்பு வேலிகளுக்கிடையில் முகத்தினை வைத்துக் கொண்டு குரங்கு போல பராக்குப் பார்க்கலாம். அவ்வளவுதான்.


சரி இதற்குப் பின்னும் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று சொல்லாவிட்டால், அது அவ்வளவு நன்றாக இருக்காது. சில விடயங்களில் சில மனிதர்கள் தங்களின் சுய அனுகூலங்களுக்காக சிலவற்றைக் கடைப்பிடிப்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் பக்கிங்காம் மாளிகை. (மக்கள் ஏதோ மனுக்கொடுக்க வந்தவர்கள்போல வெறுமனே காய்ந்து கொண்டு இருந்துவிட்டு வீடு செல்லுகிறார்கள்.)

ஒரு மனிதரை மதிப்பது வேறு! அவருக்கு மேலதிகமாக மரியாதை கொடுப்பது வேறு! இரண்டாவதை ஏற்க முடியாதது என்றே சொல்வேன். காதல்கவிதை திரைப்படத்தில் டயானாவை 'காதலான தாயே' என்று ஒரு பாடலில் வர்ணித்து இருப்பார்கள். இந்த விடயத்தில் டயானாவில் ஏதும் தவறில்லை. வியாபார நோக்கில் அன்றைய சு10ளலில் சினிமாக்காரர்கள் செய்த யுக்தி இது! ஏனென்றால் போட்ட பணத்தினை திருப்பி எடுக்கவேண்டும். பார்வையாளர்களினைக் குறித்து அக்கறை எல்லாம் அவர்களுக்கு இல்லை. ஆனால் பார்த்தவருர்களுக்கு டயானா தேவதை! எங்கோ இருந்த பெண்மணிக்கு மனதில் 'இளவரசி' சிங்காசம் கொடுத்து அமர்த்தி விட்டார்கள்.


எனக்கென்னவோ யாராகிலும் சினிமா நடிகர்களை தல,கில என்று சொல்லக் கேட்டால் மிகவும் வேதனையாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் இன்னொருவரின் பங்கு என்ன? ஏன் இப்படி ஒரு மாயை, பிரம்மை?

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. யாரும் யாரையும் விடக் கூடியவர்கள் அல்ல! ஒருவர் மீது ஒருவர் பிரமிப்பு வைப்பது து}க்கித் தலையில் வைத்திருப்பது போன்றவை சென்ற நு}ற்றாண்டுக்கு வேண்டு மென்றால் பொருந்தலாம் ஆனால் இந்த நு}ற்றாண்டுக்கு.... வேண்டாம் து}க்கி எறியுங்கள்!