Monday, October 10, 2005

CONTROVERSIAL MATTER

இது கொஞ்சம் Controversial ஆன விசயம். இப்படியான விசயங்களை வாசிக்க விரும்பாதவர்கள் இந்த இடத்திலேயே நிறுத்தி விடுங்கள். ஆனால் அப்படி என்ன Controversial ஆன விடயம் என்று பார்ப்போமே என்று எண்ணுபவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். "முக்கியமாய்'' யோசிக்கலாம்.

நான் பேசிக்கொண்டு இருக்கிறபொழுது பலர் என்னிடம் கேட்கிற கேள்வி
நீங்கள் நாத்தீகனா (Atheist)?
கடவுளை நம்பமாட்டீர்களா?
உலகப் படைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்பதுதான்.

எனக்கு கடவுள் என்கின்ற சக்தி வாய்ந்த ஒருவரில் நம்பிக்கை இல்லை. எதற்காக, எப்படி, நான் அதனை நம்புவது? அது சிரமமான விடயம் எனக்கு. என்னைப் பொறுத்த வரையில் கடவுள் என்பவர் இல்லை. கடவுள் என்பவள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை ஏனெனில் சகல மதங்களிலும் பெண் இரண்டாம் பட்சம்தான்.

ஆனால் கடவுள்த்தன்மை என்ற ஒன்று இருக்கிறது. அது எங்களுக்குள்தான் இருக்கிறது. அதனைப் Potential God எனலாம். அது நாங்கள்தான். எங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் கண்டறியவேண்டும். அதை விடுத்து மதங்களின் பின்னால் இழுபடுவது உண்மையான கடவுளைக் காண்பிக்காது.

என் பள்ளிக் காலங்களில் நாங்கள் உள்கட உள்கட என்று வேகமாகச் சொல்லி விளையாடுவோம் அது "கடவுள்'' என்று தொனிக்கும். அதன் உண்மை அன்று எங்களுக்குப் புரியவில்லை. இப்பொழுதும் பலருக்குப் புரியவில்லை. ஆக "கடவுள்'' என்பது எமக்குள்கும் இருக்கிறது. அங்கே நாம் அதைத் தேடவேண்டும். உள்ளே கடந்து சென்று தேடவேண்டும். அது தவிர கட்டடங்களில் அல்ல. அன்பும் "உண்மையுமே'' கடவுள்.

பொதுவாக நான் மதங்களினைப் பற்றி யாரிடமும் தேவை இல்லாமல் விவாதிப்பதில்லை. ஆனால் ஒரு சத்தியத்தினைச் சொல்வதற்காக அதைப் பற்றி கொஞ்சம் அலசுவதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.

கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் இறைவன் ஆதாமினை மண்ணில் இருந்து படைக்கிறான் பின் ஆதாமின் எலும்பு ஒன்றினை எடுத்து ஏவாளைப் படைக்கிறான். சொல்லவருகிற சேதி. மனிதா நீ மண்ணடா மண்ணுக்கு மறுபடியும் போவாய். பெண்ணே நீ ஆதாமிலிருந்து உருவானவள் ஆதாமுக்காகவே உருவானவள். முதலாவது தத்துவம் இரண்டாவது ஆணாதிக்கம்.
நான் சொல்ல வருவது என்னவெனில் முதல்க் குடும்பம் ஆதமும் ஏவாளும் இரண்டு மகன்களுமாம். இதில் இருந்துதான் உலகம் உருவானதாம். எப்படி என்பது கேள்வி?. கீழ்த்தரமான உறவு முறைகளில் இருந்துதான் நாங்கள் உருவானோமா. என் நண்பர் ஆண்டவனின் அனுமதி அதற்கு இருந்திருக்கும் என்றார். அவர் ஆண்டவனின் அனுமதி என்று எதுவும் செய்யலாமாம். பயமாக இருந்தது எனக்கு. இவைபோல பல சிக்கல்கள் இருக்கிறது. நான் ஆரம்பத்தில் இருந்த ஓர் உதாரணத்தினைச் சொன்னேன் அவ்வளவுதான்.

அண்மையில் இணையத்தில் ஒர் கட்டுரை படித்தேன் அதில் இப்படி இருந்தது. சிவமகா புராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட மோதல் வந்தது. பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமா தேவியார் தன் குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இதில் எத்தனையோ கேள்விகள்

எதற்கு. ஏன் கடவுளுக்குக் காவல்
ஏன் சிவபெருமானுக்கு பிள்ளையார் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை.
ஏன் பிள்ளையாரை சிவன் அவரது சக்தியால் தற்காலிகமாக கட்டுப்படுத்த வில்லை.
ஏன் மனித உடலுக்கு சும்மாபோன யானையின் தலையை வெட்டி வைத்தார்.
பிள்ளையாரின் பழைய தலையின் நிலை என்ன?
யானை முண்டத்தின் நிலை என்ன?

யோசித்துப்பார்த்தேன் எனக்கு இது கதை என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் பக்கம் நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.
புத்தர் தன்னைக் கடவுளாகவோ அல்லது மதம் தொடங்குங்கள் என்றோ சொல்லவில்லை அவரும் சத்தியத்தினைத்தான் சொன்னார். ஆனால் மக்கள் அவரின் மறைவுக்குப்பின் அவரைக் கடவுளாக்கி விட்டார்கள்.

இப்படி ஒவ்வொரு மதத்திலும் சிக்கல்கள் இருக்கிறது. ஏனெனில் இதை உருவாக்கிய வர்களின் காலத்தில் யாரும் கண்டமாதிரிக் கேள்வி கேட்டு இருக்கமாட்டார்கள். கேட்டாலும் ஏதாவது தெய்வ குற்றம் என்று பூச்சுற்றி இருப்பார்கள். உதாரணத்திற்கு அம்மைநோய். அது ஏன் வருகிறது. அம்மாளின் கோபம். கோயில் கிணற்றில் எல்லாம் குளிக்கவைத்தார்கள். இப்போ மாத்திரைகள் கூட இருக்கிறது. இன்னமும் சிலர் மாத்திரைகள் எடுப்பதில்லை. தெய்வகுற்றமாம்.

எத்தனை காலத்திற்கு இப்படி து}ங்கப் போகிறோம். ஏற்கனவே இருக்கிற பாதையில் நடக்கவேண்டும் என்பதில்லை. நல்லதாய் இருந்தால் நடப்போம் இல்லையேல் அதை தவிர்ப்போம். புதியபாதை அமைப்போம். நான் கடவுளை நம்பவில்லை. கடவுள் தன்மையினை நம்புகிறேன். எங்களுக்கு அப்பாலும் சக்தி இருக்கிறது. அதை குறிப்பிட்டு அறியமுடியாத காரணத்திற்காக உருவம் கொடுத்து வணங்கவேண்டிய தேவை இல்லை.

எங்களுக்குள்ளும் சக்தி இருக்கிறது. அதை அறியலாம். அதை அறிவோம். That is the one called Potential God.