அன்று ஒரு நாள் எனக்கு நடந்த சம்பவம் பற்றி எழுதி இருந்தேன் அது தொடர்பாக கடந்த வாரம்தான் வைத்தியரைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவரிடம் நடந்தவற்றைக் கூறினேன். அவர் ஏற்கனவே என்னுடைய பத்தியைப் படித்திருக்க வேண்டும்.
என்னைச் சோதித்துக் கொண்டு இருந்தவர் திடீரென கம்பவாரிதி ஜெயராஜ் பற்றி எழுதியது சரியா என்று கேட்டார். நான் சிரித்தேன் (ஏதாவது ஊசியப் போட்டு விடப்போறார் என்கிற பயத்தில்). பிறகு நீர் அதுக்கு இங்கு வரவில்லை, வேறு விடயத்துக்காக வந்திருக்கிறீர் என்று மறுபடி சோதனையில் இறங்கினார்.
சோதனை நடந்து கொண்டிருக்கிறது, அவர் சர்வதேசத் தமிழருக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்றார். ஆகா இதென்ன வேதாளத்தின்ர கதைபோல மரத்தில ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார் என்று நினைத்துவிட்டு பேசாமல் இருக்க (ஊசி... பயம்) மறுபடி சோதனை, பின்னர் "ஒருபேப்பரில இருக்கிறவைட்டச் சொல்லும் இராமாயணம் வாசிக்கச் சொல்லி, கம்பரப் பற்றிப் படிக்கச் சொல்லும். நாங்களும் இப்பிடித்தான் முந்தி "கிமாயணம்'' எண்டு எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னால திரிஞ்சனாங்க''. "கிமாயணம்'' தெரியுமோ? இது அவர். "இல்லை'' இது நான். நக்கல் சிரிப்பு இது அவர். பிரச்சனை என்னண்டா மூளை முதிர்ச்சி அடைய வேணும் என்று விட்டு ஏதாவது செய்யுங்கோ என்பதுபோல ஒரு ஏளனத்துடன் சிட்டையில் எழுதினார். இவர்தான் என்னை இப்போ இங்கு இதை எழுதத் து}ண்டினார்.
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் ராமாயணம் பற்றியும் கம்பர் பற்றியும் அவர் அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் தெரியும். ( ஆண்டு 11ல் படித்தது). நான் அறிந்தது இரண்டு இராமாயணம். ஒன்று மூலம் வான்மீகி இராமாயணம் மற்றயது தமிழ் மொழியாக்கம் கம்பராமாயணம். இதைவிட வேறும் இருக்கலாம் அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. மூலமும் படியும் எனக்குப் போதும்.
வான்மீகி இடம் இருந்து கம்பர் தமிழாக்கம் செய்யும்போது கம்பர் ஒரு வம்பு செய்ததாகப் படிக்கிறோம் அதாவது. தசரதனிடம் இருந்து இரண்டு வரங்களைப் பெற்ற கைகேயி இராமனை 14 வருடம் வனவாசம் போகச் சொல்கிறார். இந்த நேரத்தில் இராமன் அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற முகத்துடன் (சந்தோசமாக) ஏற்கிறார். இது கம்பருடையது. வான்மீகி அதாவது ஒறிஜினல் என்ன சொல்கிறது. இராமனுக்கு கடும்கோபம் வருகிறது, எங்கள் வழக்கில் "அடிடா பிடிடா'' என்று கத்திப் பிரச்சனைப் பட்டுத்தான் காட்டுக்குப் போகிறார்.கம்பர் ஏன் மாற்றினாரோ தெரியவில்லை. இதைவிடகடவுளாக வணங்கப்படும் ராமனின் கூத்து சீதையை தீக்குளிக்கச் சொல்லும் வரைக்கும் போகுது.
இராமனை விடுவோம். ஒரு ஆள் அப்படி இருந்தாரோ இல்லையோ அல்லது இருந்து அவருக்கு சும்மா ஒரு கதை எழுதினார்களோ தெரியவில்லை. ஆனால் கதையை வடிவாகப் பார்த்தால் சீதை கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் இலங்காபுரிக்குச் செல்ல வேண்டும் இவருக்கு உதவி செய்ய குரங்குக் கூட்டம் ஒன்று வருகிறது. அதன் தலைவர் சுக்ரீவன். பாலம் போடப்படும் இடம் அவருடைய எல்லைக்குள் இருக்கிறது. ஏன் சுத்தி வளைப்பான். தென்னிந்தியாவில் இருக்கிறது.
இலங்காபுரியில் இராவணன் என்னும் அரக்கன் இருக்கிறான். வீணை வேந்தன் என்று பட்டம் பெற்றவன். தமிழன். இலங்காபுரிக்குத் தமிழர் எங்கிருந்து போனார்கள் தென்னிந்தியாவில் இருந்து, ஆக இராமன் இலங்காபுரிக்கு இராவணனுடன் போர் புரிய வரும்போது தென்னிந்தியாவில் தமிழர் இருக்கவில்லையாம் (?) . குரங்குக் கூட்டங்கள்தான் இருந்ததாம். இப்படி இராமாயணம் சொல்கிறது. குரங்குக்கு மனைவி, அரசாட்சிப் பீடம், இதெல்லாம் எப்படி? திராவிடன் ஆரியனுக்குக் குரங்கானான்.
அதைவிட இலங்காபுரியைச் சேர்ந்த இராவணன் சிவனுக்காக தன் ஒரு தலையை பிடுங்கி நரம்பினை எடுத்து வீணை வாசித்தவர். அவர் ஒரு கொடிய அரக்கன். சின்னத்திரை மாதிரி சித்தியோடு சண்டை பிடித்துச் சின்னத்தனமாக இருந்தவர் இராமன் அவர் இன்று கடவுள்.
இராமாயணத்தை விடக் கம்பர் வேறு ஒன்றும் சொந்தமாக எழுதவில்லையா? அவைகள் து}க்கிப் பிடிக்கப்படாமல். கொப்பி அடிக்கப்பட்ட இராமாயணம் பிரபல்யம் ஆனதேன்? (அல்லது ஆக்கப்பட்டதேன்?) சந்திரமுகி வெற்றிக்கு வாசுவைப் பராட்டுவது போலத்தான் இந்த விடயத்தில் கம்பரைத் து}க்கி வைக்கிறதும்.
இப்போ விடயத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு எழுகிற இக்கேள்விகள் கம்பவாரிதிக்கு அவர்களுக்கு எழவில்லையா? மறுபடியும் சொல்கிறேன் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அல்லது அவர் சார்ந்தவர்கள், கம்பன் கழகம் என்று சொல்லிவிட்டு இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? எனக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை. அனேகர் இல்லை என்றே படுகிறது.
ஏனெனில் அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவில ஒராள் இருக்கிறார் அவருக்கும் BACKUP அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர்தான். அந்த அளவுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் மோசம் இல்லைதான் என்றாலும் இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன?
என்னைச் சோதித்துக் கொண்டு இருந்தவர் திடீரென கம்பவாரிதி ஜெயராஜ் பற்றி எழுதியது சரியா என்று கேட்டார். நான் சிரித்தேன் (ஏதாவது ஊசியப் போட்டு விடப்போறார் என்கிற பயத்தில்). பிறகு நீர் அதுக்கு இங்கு வரவில்லை, வேறு விடயத்துக்காக வந்திருக்கிறீர் என்று மறுபடி சோதனையில் இறங்கினார்.
சோதனை நடந்து கொண்டிருக்கிறது, அவர் சர்வதேசத் தமிழருக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்றார். ஆகா இதென்ன வேதாளத்தின்ர கதைபோல மரத்தில ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார் என்று நினைத்துவிட்டு பேசாமல் இருக்க (ஊசி... பயம்) மறுபடி சோதனை, பின்னர் "ஒருபேப்பரில இருக்கிறவைட்டச் சொல்லும் இராமாயணம் வாசிக்கச் சொல்லி, கம்பரப் பற்றிப் படிக்கச் சொல்லும். நாங்களும் இப்பிடித்தான் முந்தி "கிமாயணம்'' எண்டு எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னால திரிஞ்சனாங்க''. "கிமாயணம்'' தெரியுமோ? இது அவர். "இல்லை'' இது நான். நக்கல் சிரிப்பு இது அவர். பிரச்சனை என்னண்டா மூளை முதிர்ச்சி அடைய வேணும் என்று விட்டு ஏதாவது செய்யுங்கோ என்பதுபோல ஒரு ஏளனத்துடன் சிட்டையில் எழுதினார். இவர்தான் என்னை இப்போ இங்கு இதை எழுதத் து}ண்டினார்.
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் ராமாயணம் பற்றியும் கம்பர் பற்றியும் அவர் அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் தெரியும். ( ஆண்டு 11ல் படித்தது). நான் அறிந்தது இரண்டு இராமாயணம். ஒன்று மூலம் வான்மீகி இராமாயணம் மற்றயது தமிழ் மொழியாக்கம் கம்பராமாயணம். இதைவிட வேறும் இருக்கலாம் அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. மூலமும் படியும் எனக்குப் போதும்.
வான்மீகி இடம் இருந்து கம்பர் தமிழாக்கம் செய்யும்போது கம்பர் ஒரு வம்பு செய்ததாகப் படிக்கிறோம் அதாவது. தசரதனிடம் இருந்து இரண்டு வரங்களைப் பெற்ற கைகேயி இராமனை 14 வருடம் வனவாசம் போகச் சொல்கிறார். இந்த நேரத்தில் இராமன் அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற முகத்துடன் (சந்தோசமாக) ஏற்கிறார். இது கம்பருடையது. வான்மீகி அதாவது ஒறிஜினல் என்ன சொல்கிறது. இராமனுக்கு கடும்கோபம் வருகிறது, எங்கள் வழக்கில் "அடிடா பிடிடா'' என்று கத்திப் பிரச்சனைப் பட்டுத்தான் காட்டுக்குப் போகிறார்.கம்பர் ஏன் மாற்றினாரோ தெரியவில்லை. இதைவிடகடவுளாக வணங்கப்படும் ராமனின் கூத்து சீதையை தீக்குளிக்கச் சொல்லும் வரைக்கும் போகுது.
இராமனை விடுவோம். ஒரு ஆள் அப்படி இருந்தாரோ இல்லையோ அல்லது இருந்து அவருக்கு சும்மா ஒரு கதை எழுதினார்களோ தெரியவில்லை. ஆனால் கதையை வடிவாகப் பார்த்தால் சீதை கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் இலங்காபுரிக்குச் செல்ல வேண்டும் இவருக்கு உதவி செய்ய குரங்குக் கூட்டம் ஒன்று வருகிறது. அதன் தலைவர் சுக்ரீவன். பாலம் போடப்படும் இடம் அவருடைய எல்லைக்குள் இருக்கிறது. ஏன் சுத்தி வளைப்பான். தென்னிந்தியாவில் இருக்கிறது.
இலங்காபுரியில் இராவணன் என்னும் அரக்கன் இருக்கிறான். வீணை வேந்தன் என்று பட்டம் பெற்றவன். தமிழன். இலங்காபுரிக்குத் தமிழர் எங்கிருந்து போனார்கள் தென்னிந்தியாவில் இருந்து, ஆக இராமன் இலங்காபுரிக்கு இராவணனுடன் போர் புரிய வரும்போது தென்னிந்தியாவில் தமிழர் இருக்கவில்லையாம் (?) . குரங்குக் கூட்டங்கள்தான் இருந்ததாம். இப்படி இராமாயணம் சொல்கிறது. குரங்குக்கு மனைவி, அரசாட்சிப் பீடம், இதெல்லாம் எப்படி? திராவிடன் ஆரியனுக்குக் குரங்கானான்.
அதைவிட இலங்காபுரியைச் சேர்ந்த இராவணன் சிவனுக்காக தன் ஒரு தலையை பிடுங்கி நரம்பினை எடுத்து வீணை வாசித்தவர். அவர் ஒரு கொடிய அரக்கன். சின்னத்திரை மாதிரி சித்தியோடு சண்டை பிடித்துச் சின்னத்தனமாக இருந்தவர் இராமன் அவர் இன்று கடவுள்.
இராமாயணத்தை விடக் கம்பர் வேறு ஒன்றும் சொந்தமாக எழுதவில்லையா? அவைகள் து}க்கிப் பிடிக்கப்படாமல். கொப்பி அடிக்கப்பட்ட இராமாயணம் பிரபல்யம் ஆனதேன்? (அல்லது ஆக்கப்பட்டதேன்?) சந்திரமுகி வெற்றிக்கு வாசுவைப் பராட்டுவது போலத்தான் இந்த விடயத்தில் கம்பரைத் து}க்கி வைக்கிறதும்.
இப்போ விடயத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு எழுகிற இக்கேள்விகள் கம்பவாரிதிக்கு அவர்களுக்கு எழவில்லையா? மறுபடியும் சொல்கிறேன் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அல்லது அவர் சார்ந்தவர்கள், கம்பன் கழகம் என்று சொல்லிவிட்டு இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? எனக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை. அனேகர் இல்லை என்றே படுகிறது.
ஏனெனில் அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவில ஒராள் இருக்கிறார் அவருக்கும் BACKUP அறிவு ஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர்தான். அந்த அளவுக்கு கம்பவாரிதி ஜெயராஜ் மோசம் இல்லைதான் என்றாலும் இராமரைத் து}க்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன?