Friday, December 02, 2005

எம் கலாசாரம்

எந்த ஒரு இனமும் தனித்து வாழவேண்டும் என்றால் அதற்கென்றொரு மொழி கலை கலாசாரம் இருக்கவேண்டும் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். தமிழ் கலாசாரத்தை வாழ வைக்க அல்லது பேணவேண்டிய பொறுப்பு தமிழர்களிடமே இருக்கிறது.

எந்தவொரு மனிதனும் எங்களுடைய தனித் தன்மையினை அல்லது விசேட தன்மைகளை அசட்டை செய்கிறபோது அவர்களுக்கு தமிழர்கள் குறித்தும் அவர்கள் கலாசாரம் பற்றியும் சொல்ல வேண்டிய கடைப்பாது ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. அதனை விட புலத்தில் வாழும் நாங்கள் வேற்றுக் கலாச்சார அல்லது பல்லினக் கலாச்சார மக்களுடன் சேர்ந்து வாழுகிறபடியினால் எங்கள் தனித்தன்மையை நாம் கவனமாகக் காக்க வேண்டும். எங்கள் நடை உடை பாவனை மூலம் இதனை மற்றவர்கள் உணரக் கூடியதாக நடக்கலாம். சுருங்கச் சொன்னால் எங்கள் வாழ்க்கை முறை மூலமாக இதனை வெளிப்படுத்தி நாம் தமிழர் என்ற இனம் என்பதை வெளிப்படுத்தலாம்.

இப்படிச் சொல்லும் பலவிதமான கலாசாரக் காவலர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் தவறில்லை ஆனால், நாம் எப்படியெல்லாமோ வாழ்ந்து கொண்டு இருக்கிறபோது தமிழர் கலாசாரத்தினை மட்டும் காத்துக் கொள்வதால் என்ன பயன். ஆகா எல்லாளனும் சினிமா நடிகைகளுக்கு வக் காலத்து வாங்குகிறாரோ (வாங்குகிறானோ) என்று உங்களுக்குத் தோன்றும். அவர்கள் என்ன சொன்னார்கள் அவை பத்திரிகைகளில் எவ்வடிவில் வந்தன என்பது பற்றித் தெளிவு இல்லை என்பதால் அது தொடர்பான சரி பிழை களை விட்டுவிடுவோம். அதைவிட என்னுடைய கருத்து சினிமாக்காரருடன் ஒத்துப்போகிறதா என்ற தேவை யாருக்கும் இல்லை.

நாம் நலமான அல்லது சீரான வாழ்வினை வாழ்வதற்காகவே இந்தக் கலாசாரம் என்கிற ஒரு ஒழுக்கமைப்புடைய முறை ஏற்படுத்தப் பட்டிருக்குமே அன்றி நாசமாவதற்கு அல்ல. அப்படி என்றால் கலாசாரம் பற்றி அக்கறைப்படுகிற அனைத்து ஆசாமிகளும் ஒரு ஒழுங்கான அல்லது ஒழுக்கமான முறையுடன் சீரான வாழ்க்கையினை வாழ ஆசைப்படுகிறவர்கள் என்று கொள்ளலாம் என்று கருதுகிறேன். அதனால்தான் அவர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட முறைகளை இயலுமான அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள், கடைப்பிடிக்க வைக்கிறார்கள்.

இங்குதான் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது ஒரு கேள்வி இருக்கிறது. உண்மையில் இவர்கள் சீராக வாழவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதனைச் கடைப்பிடிக்கிறார்களா அல்லது நாம் தமிழர் எம் தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாழோடு முன்தோன்றி மூத்த தமிழ். எங்கள் முத்து தமிழ், எங்கள் சொத்து தமிழ் என்று நினைக்கிறபடியால் கடைப்பிடிக்கிறார்களா அதுவும் அல்லாவிட்டால் சிறிய வயதில் இருந்து இயல்பாகவே அப்படி Programme பண்ணப்பட்ட படியால் கடைப்பிடிக்கிறார்களா என்பதே அந்தக் கேள்வி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ( நீ எழுதிறதெண்டா எழுதிப்போட்டுப் போ எங்களிட்ட எல்லாம் உனக்கு என்ன கேள்வி... )

எனக்கென்னவோ நாங்கள் தமிழர் என்பதற்காகவும் ஏற்கனவே அப்படி Programme பண்ணப் பட்டு இருப்பதாலுமே கலாசாரம் என்ற ஒன்றினை து}க்கிப்பிடிக்கிறோம் என்று படுகிறது

நான், வெறும் தமிழர்கள் மட்டும்தான் இப்படி என்று சொல்லவில்லை. உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு இனமாகிலும் தங்கள் கலாசாரத்தினை து}க்கிப்பிடித்து வைத்திருப் பவர்கள் அனைவரையும்தான் இப்படிச் சொல்கிறேன். அதே நேரத்தில் இதனைச் சரி, தவறு என்று கூறும் வாதத்திற்கும் நான் வரவில்லை. பின்னர் ஏன் இப்படிச் சொல்கிறேன்.

அதாவது இப்படி வாழவேண்டும் இதுவே எங்கள் முறை இதுவே சரியான சீரான வாழ்க்கை என்பவர்களில் 99 வீதத்தினர் தமது அன்றாட வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஒழுங்காக வாழ்
கிறார்கள்? "ஒழுங்கு'' என்கிற ஒரு வார்த்தையை வைத்து ஏதோ கள்ளத்தொடர்பினைப் பற்றி எண்ண வேண்டாம்.
ஒரு மனிதனுடைய எண்ணமும் உடலும்தான் "அவன்''

இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த எண்ணத்திற்கும் உடலுக்கும் ஏற்றதான வாழ்க்கையினை நாம் வாழ்கிறோமா? பெரிதாய் இல்லாமல் சிறியதாய் ஒரு விடயத்தினைச் சொல்கிறேன் புகைப்பிடித்தல்!
புகைத்தல் கொல்லும் என்று எழுதினாலும் அதைப் பற்றி அக்கறைப்படாமல் சதா ஊதித் தள்ளுபவர்கள் எத்தனை பேர்? புகைத்தல் என்பது ஒரு உதாரணத்திற்கு நான் சொல்கிற விடயம். ஆனால் இதற்கப்பால் எத்தனையோ இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வீடு தொழில் உறவுகள் இடையே எத்தனையோ பரிசைகேடான நிகழ்வுகளை நாம் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

சாதாரணமாக குப்பைத்தொட்டி சற்று எட்டத்தில் இருக்கிறபோது நிக்கிற இடத்தில் குப்பையினை எறிந்து விட்டுப்போவதே எங்கள் எண்ணத்தில் எதோ சிக்கல் இருக்கிறது என்பதைத் தான் வெளிப்படுத்துகிறது.
கலாசாரம் ஒருவரிடம் இருந்து இன்னொரு இனத்தவரை வேறுபடுத்தி நின்றாலும் அது ஒழுங்கான சீரான வாழ்க்கை முறைக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும். ஆகவே அவற்றை பேணுவோம்.

அதுதானே எம் கலாசாரம்.

No comments: